ம துபோ தையில் ஒருவர் அ டித்து கொ லை : திருகோணமலையில் சம்பவம்!!

284


அடித்து கொ லை



திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுரங்குடா பகுதியில், நேற்றிரவு இருவருக்கிடையில் இடம்பெற்ற கை கலப்பில் ஒருவர் உ யிரிழந்துள்ளார். மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மதுரங்குடா பகுதியில் மீன் வாடியொன்றில் மூவர் ஒன்றிணைந்து ம து அ ருந்திக் கொண்டிருந்த போது இருவருக்கிடையில் ஏற்பட்ட வா க்குவாதம் கைக லப்பாக மாறியதாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.




மதுரங்குழிய-கோடுவாடுவ பகுதியைச் சேர்ந்த வெல்லவகே சுமித் பிரணாந்து(40 வயது) என்ற நபரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். உ யிரிழந்தவரின் ச டலம் தற்போது குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.