பேஸ்புக் பயனாளர்களுக்கு மஹிந்த எச்சரிக்கை!!

301

பேஸ்புக் பயனாளர்களுக்கு..

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சேறு பூசும் நடவடிக்கை முன்னெடுக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பயனாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவினர் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பேஸ்புக் நிறுவன அதிகாரிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.