வவுனியாவின் புதிய தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என்.பி.வெளிகள தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
களுத்துறை மாவட்டம் ஹொறண பகுதியைச் சேர்ந்த நயன் பிரசன்ன வெளிகள, வவுனியாவின் 22ஆவது தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமயத்தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.