வவுனியா செட்டிகுளம் பகுதியில் காட்டிலிருந்து சடலம் மீட்பு!!

387


ச டலம் மீட்பு



வவுனியா செட்டிகுளம் அரசடிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து இன்று (14.08.2019) மாலை 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.



மனைவி வேலைக்கு சென்று மதியம் வீடு திரும்பியபோது கணவரை வீட்டில் காணவில்லை. அதனையடுத்து அயலவர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.




செட்டிக்குளம் அரசடிக்குளம் பகுதியில் உள்ள 4ம் வாய்க்கால் காட்டுப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட சமயத்தில் குறித்த நபர் காட்டுப்பகுதியில் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து செட்டிகுளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.


சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் கட்டுத்துவக்கு வெடித்ததில் இவர் உ யிரிழந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பிரதே பரிசோதனைகளுக்காக ச டலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.