காதலனுடன் சேர்ந்து மோசமான செயலில் ஈடுபட்ட கல்லூரி மாணவி!!

294

கல்லூரி மாணவி

சென்னையில் காதலனுடன் சேர்ந்து செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த திஷேரிங் லேப்சா என்பவரின் மனைவி பிரசன்னா (42). இவர் கடந்த 12ம் திகதியன்று டிரைவிங் ஸ்கூலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த காதல் ஜோடி, திடீரென அவருடைய கைப்பையை பறித்து சென்றுள்ளனர். அதில் அவருடைய செல்போன் இருந்ததாகவும், அதனை மீட்டு தருமாறும் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு ஆணும், பெண்ணும் இடம்பெற்றிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார், வண்டியின் பதிவெண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சென்னையை சேர்ந்த ராஜு (23) என்பவரும், கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் சுவாதி (20) என்பவரும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து பொலிஸார், சிறையில் அடைத்துள்ளனர்.