ஒரு இலட்சம் பனை விதை
வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுவதற்கு சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஒரு இலட்சம் பனை விதைகளை விதைக்கும் நோக்கத்துடன் வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக இன்று (17.08.2019) ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.
வவுனியா கூமாங்குளம் குளக்கரை அண்டிய பகுதிகளில் வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர்களால் முதற்கட்டமாக பனை விதைகளை விதைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் 10 ஆயிரம் பனை விதைகள் வவுனியா பிரதேசத்தில் விதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.