வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் சங்கமம் நிகழ்வு!!

422

சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் சங்கமம் நிகழ்வு

சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சங்கம நிகழ்வு வவுனியாவில் இன்று (17.08) சிறப்பாக நடைபெற்றது.

வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசம் மற்றும் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், சிறப்பாக செயற்பட்ட உத்தியோகத்தர்களுக்கும், சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளைப் பெற்ற அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கும் பரிசளிப்பும், சமாசத்தின் கணொளி வெளியீடும் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசத் தலைவர் அ.ச.பாரதி ஆனந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 50 வருடகாலம் கூட்டுறவுச் சேவையில் இணைந்து செயற்பட்டமைக்காக சமாசத்தின் முன்னாள் தலைவரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான நா.சேனாதிராஜா அவர்களுக்கு ஆளுனர் கௌரவிப்பை வழங்கினார்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன், அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா, கூட்டுறவு ஆணையாளர் பொ.வாகீசன், இலங்கை சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் பி.ஏ.ஹிரிவந்தெனிய, வவுனியா நகரசபை உறுப்பினர்களான த.பரதலிங்கம், ரி.கே.இராஜலிங்கம், க.செந்தில்ரூபன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரன், கூட்டுறவு உத்தியோகத்தர்கள், சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.