வவுனியாவில் மக்கள் அதிகம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடல்!!

351


கலந்துரையாடல்



இலங்கையில் மனித மற்றும் தொழிலாளர் உரிமை மீ றல் தொடர்பிலான குழுவின் கலந்துரையாடல் ஒன்று வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகேயுள்ள விருந்தினர் விடுதியில் இன்று (24.08.2019) 9.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை இடம்பெற்றிருந்தது.



இக் கலந்துரையாடலின் போது வவுனியா வடக்கில் பெருன்பான்மையினத்தவரின் ஆ க்கிரமிப்பு, வடக்கில் தமிழ் மொழிப் பு றக்கணிப்பு, தமிழர்களின் பூர்வீக இடங்களை தொல்பொருள் திணைக்களம் ஆ க்கிரமிப்பது , வவுனியாவில் பொதுமக்கள் அதிகமாக எதிர்நோக்கும் பிரச்சனைகள், வரிச்சலுகை தொடர்பான அறிக்கையிடல் அதுசார்ந்த தெளிவுத்தன்மை, வவுனியா மாவட்டத்தின் தற்காலிக நிலைமைகள், மனித உரிமைகள் சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.




இக் கலந்துரையாடலில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


இக் குழுவின் இவ்வாறான கலந்துரையாடல் நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.