வவுனியாவில் பண்டாரவன்னியனின் நினைவுதினம் அனுஸ்டிப்பு!!

499

பண்டாரவன்னியனின் நினைவுதினம்

வன்னி மண்ணின் விடுதலைக்காக போராடிய இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216 ஆவது வெற்றி விழாவும், நினைவு தின அனுஸ்டிப்பும் இன்று (25.08.2019) நடைபெற்றது.

வவுனியா நகரசபைத் தலைவர் இ.கௌதமன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகம் முன்பாகவுள்ள பண்டாரவன்னியனின் சிலைக்கு முன்னாள் இடம்பெற்றது.

இதன்போது பண்டாரவன்னியனின் சிலைக்கு மாலை அணிவித்தும் மலரஞ்சலி செலுத்தியும் நினைவு கூரப்பட்டதுடன், பண்டாரவன்னியனின் வரலாறு தொடர்பிலும் கருத்துரை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வவுனியா நகரசபை உறுப்பினர்கள், வவுனியா வடக்கு பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,

செட்டிகுளம் பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஜனாதிபதி சட்டத்தரணியும் பண்ணாரவன்னியனின் சிலை நிறுவியவருமான மு.சிற்றம்பலம், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.