இளைஞரை மூன்று ஆண்டுகளாக பழிவாங்க துடிக்கும் காகங்கள் : அவர் பயத்துடன் வாழ காரணம் என்ன?

369

பழிவாங்க துடிக்கும் காகங்கள்

இந்தியாவில் காக்கை குஞ்சு ஒன்றை இளைஞர் கொ ன்றுவிட்டதாக எண்ணும் காக்கைகள் அவர் மீது கடந்த மூன்று ஆண்டுகளாக தா க்குதல் நடத்தி வருகின்றன. மத்தியபிரதேசம் ஷிவ்புரி மாவட்டம் சுமேலா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா கேவத். இவர் கடந்த 3 ஆண்டுகளாக காக்கைகளில் தா க்குதலுக்கு ஆளாகி வருகிறார்.


வெளியில் சென்றாலே தன்னை பாதுகாத்து கொள்ள குச்சியுடன் செல்கிறார் சிவா. இதற்கு காரணம், 3 ஆண்டுகளுக்கு முன் வலையில் சிக்கிய காக்கை குஞ்சு ஒன்றை சிவா காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.

ஆனால் அவர் கையில் இருக்கும் போதே காக்கைக் குஞ்சு இ றந்துவிட்டது. இதனைக் கண்ட காகங்கள், குஞ்சின் இ றப்புக்கு காரணம் சிவா தான் என நினைத்து அவர் மீது தா க்குதல் நடத்த தொடங்கியுள்ளன. இந்தத் தாக்குதல் 3 வருடங்களாக தொடர்வது தான் ஆச்சரியம்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவா, நான் அதன் குஞ்சை கொ ன்றுவிட்டதாக காக்கைகள் நினைத்துவிட்டன. ஆனால் நான் காப்பாற்றவே நினைத்தேன்’ என கூறினார்.


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பறவைகள் ஆய்வாளர்கள், காக்கைகள் ஆட்களை நினைவில் வைத்திருக்கும் அறிவுத்திறன் கொண்டவை. அதனிடம் தவறாக நடந்துகொண்டால் நினைவு வைத்துக்கொண்டு பழிவாங்கும் என கூறியுள்ளனர்.