இளைஞரை காதலித்து கரம் பிடிக்க போகும் திருநங்கை : இங்கு இதுவே முதல் முறை!!

527

திருநங்கை கவிஞர் விஜய ராஜமல்லிகா

கேரளாவைச் சேர்ந்த திருநங்கை கவிஞர் விஜய ராஜமல்லிகா, தனது காதலரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்தவர் கவிஞர் விஜய ராஜமல்லிகா. திருநங்கையான இவர் திருச்சூர் நகர காவல் நிலையத்தில், தன்னார்வலராக பணியாற்றி வருகிறார்.

இவர் எழுதிய தெய்வத்தின்டே மக்கள் என்ற கவிதைத் தொகுப்பு கேரளாவில் பலரால் கவனிக்கப்பட்டது. அதன் பின் இந்த தொகுப்பு சென்னை பல்கலைக்கழகத்தில், முதுகலை மலையாள இலக்கியத்தில் பாடமாக வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இவரின் அடுத்தடுத்த கவிதை தொகுப்பளான ஆண் நதி, இவரது சுயசரிதை, மல்லிகா வசந்தம் ஆகியவை விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் விஜய் ராஜமல்லிகாவும், திருச்சூர் அருகிலுள்ள மண்ணுதியை சேர்ந்த ஜாஸிமும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு ஜாஸிம் குடும்பத்தினர் எ திர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து தற்போது விஜய ராஜமல்லிகாவும், ஜாஷிமும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்களின் திருமணம் வரும் சனிக்கிழமை நடக்க இருக்கிறது. கேரளாவில், திருநங்கை கவிஞர் ஒருவர் திருமணம் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.