வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில் கட்டடத் திறப்புவிழா!!

252


கட்டடத் திறப்புவிழா



பண்பு, அறிவு, வலு நிறைந்த பிள்ளைகள் சமூகம் ஒன்றை நாட்டுக்கு உருவாக்கும் நோக்கில் கல்வி அமைச்சின் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிபர் விடுதி ,ஆசிரியர் விடுதி, என்பன இன்றையதினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.



பாடசாலை அதிபர் திரு.பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்து கொண்டு அதிபர் விடுதி, ஆசிரியர் விடுதியினை நாடா வெட்டித் திறந்துவைத்தார்.




இந் நிகழ்வில் தொழினுட்ப உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.