கணவன்- மனைவி அடுத்தடுத்து த ற்கொ லை : அனாதையான குழந்தைகள்!!

258

அனாதையான குழந்தைகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப த கராறு காரணமாக கணவன் – மனைவி அடுத்தடுத்து த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர்கள் முருகானந்தம் (45) – வனிதா (35) தம்பதியினர். இவர்களுக்கு களஞ்சியம் (17) என்கிற மகனும், ஐஸ்வர்யா (16) என்கிற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருமே அருகாமையில் உள்ள பள்ளியில் பிளஸ்-2, பிளஸ்-1 படித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாகவே தம்பதியினருக்குள் அடிக்கடி ச ண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வனிதா கோபித்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரை சமாதானம் செய்து இருவீட்டின் உறவினர்களும் முருகானந்தத்துடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் கணவன், மனைவிக்கு இடையில் வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆ த்திரமடைந்த முருகானந்தம் திடீரென விஷ மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அவருடைய மனைவியும் விஷ மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதற்குள்ளாக இருவரும் பரிதாபமாக உ யிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து முருகானந்தத்தின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.