யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ப லி!!

239


யாழில்..



யாழ்ப்பாணம் – புத்தூர், நவக்கரி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த முதியவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உ யிரிழந்துள்ளதாக அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இதன்போது நவக்கிரி,புத்தூர் பகுதியினை சேர்ந்த கந்தையா சிவபாலன் வயது (70) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். உ யிரிழந்த முதியவர் நேற்று இரவு வீதியோரமாக நடந்து சென்றுக்கொண்டிருக்கையில் பக்க திசையில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் முதியவரை சடுதியாக மோதி தள்ளியுள்ளது.




இதன்போது காயமடைந்த நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.