வவுனியா மன்னார் வீதியில் பாடசாலை மாணவனை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கில் : இருவர் படுகாயம்!!

301

விபத்து

வவுனியா மன்னார் வீதியில் இன்று (10.09.2019) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் – துவிச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மன்னார் வீதியூடாக துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் பட்டாணிச்சூர் பகுதியில் வீதியில் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கில் துவிக்கரவண்டியினை மோதித்தள்ளி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கில் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 16 வயதுடைய பாடசாலை மாணவனும் மோட்டார் சைக்கிளை செலுத்திய 28 வயதுடைய இளைஞனும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.