நள்ளிரவில் கு ழந்தையை க டத்த முயற்சி : இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கைது!!

249


தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 5 மாத குழந்தையை நள்ளிரவில் க டத்த முயன்ற சம்பவம் தொடர்பில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஒருவரை தமிழக பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இது குறித்து தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



“வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த சோளிங்கர் ரயில் நிலைய வளாகத்தில், தண்டவாள பணிகளுக்காக ஆந்திராவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கியுள்ளனர்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் துர்காபிரசாத் என்பவரின் 5 மாத குழந்தை ரிஷிகவந்தாவை ம ர்ம நபர் ஒருவர் தூ க்கி உள்ளார். அப்போது குழந்தை அழுததால், அவரது மனைவி எழுந்ததும் அந்த நபர் தப்பி ஓடியுள்ளார்.



இதையடுத்து மர்ம நபரை துரத்திச் சென்ற தொழிலாளர்கள், புதருக்குள் பதுங்கிய அவரை பிடித்து கம்பத்தில் க ட்டிவைத்து அ டித்ததுடன், ரயில்வே பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.



விசாரணையில், குழந்தையை க டத்த மு யன்றவர் அணைக்கட்டு இலங்கை அகதிகள் முகாமை சோ்ந்த தினேஷ் என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த பொலிஸார் ,காட்பாடி ரயில்வே காவல் நிலையம் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.