வவுனியா பேரூந்து நிலையத்திற்கு அருகே விபத்து : ஒருவர் படுகாயம்!!

243

விபத்து

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(12.09.2019) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் – வான் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியா நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்துக்கொண்டிந்த மோட்டார் சைக்கில் வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் வந்து கொண்டிருந்த வான் மோட்டார் சைக்கினை மோதித்தள்ளி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 22 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து வாகனத்தினை அப்புறப்படுத்தியதுடன் அவ்விடத்திற்கு வருகை தந்த போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்துடன் மேலதிக விசாரணைகளுக்காக இரு வாகனத்தினையும் போக்குவரத்து பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.