திலீபனின் நினைவு தினம்
இந்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஈழத்தமிழன் உரிமையை வலியுறுத்தி நீராகாரமின்றி அஹிம்சைப் போராட்டத்தை பாரத நாட்டிற்கு பாடம் புகட்டிய ஈழத்தமிழர்களின் தவப்புதல்வன் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (15.09.2019) காலை நடைபெற்றது.
உலகத் தமிழ் தேசிய மக்கள் அமைப்பின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற நினைவு தினத்தில் 4வயது சிறுவன் முதலாவது ஈகைச்சுடரினை ஏற்றிவைத்ததுடன் அங்கிருந்த அனைவரும் சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனம் மற்றும் அதிதிகள் உரை என்பன இடம்பெற்றிருந்தது.
இந் நிகழ்வில் உலகத் தமிழ் தேசிய மக்கள் அமைப்பின் செயலாளர் அந்தோனிப்பிள்ளை யோகராணி , நகரசபை உறுப்பினர் பா.பிரசன்னா, அருட்தந்தை கலாநிதி ஜோன்கோல், புதுக்குளம் மகா வித்தியாலய அதிபர் கணேஸ்வரன், வட இலங்கை சமாதான நீதவான் சங்க தலைவர் ஜெயவிந்தன், யாழ் மாவட்ட சமாதான நீதவான் சங்க செயலாளர் ஜெயக்குமார் , மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.