வவுனியா பாவற்குளத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய சிறுமி!!

423


வவுனியா பாவற்குளத்தில்..



பாவற்குளம் படிவம் 06 புதிய குடியிருப்புப் பகுதிக்குள் உள்ள கற்குவாரி பகுதியில் கற்களை உடைக்க வைக்கப்பட்ட வெ டியினால் குடியிருப்பு வீடுகளின் மேல் விழுந்த கற்களால் ம யிரிழையில் சிறுமி ஒருவர் உ யிர்தப்பியுள்ளார்.



இச் சம்பவம் தொடர்பாக இன்று (08.10) பிற்பகல் கிராம அபிவிருத்திச் சங்கம், பிரதேச சபை உறுப்பினரிடம் தெரிவித்ததை அடுத்து பிரதேச சபை உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.




இச் சம்பவம் தொடர்பாக பிரதேச செயலாளர், பிரேதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் ..
கிராம சேவகர் ஆகியோருக்கும் மக்கள் தெரியப்படுத்தியுள்ளார்.


சில நாட்களாக இக் கற்குவாரி இயங்காமல் இருந்த போதும் தற்போது இயங்க ஆரம்பித்துள்ளது. இதனா‌ல் இதனை சூழவுள்ள மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இக் கற்குவாரிக்கு அருகே பாடசாலை ஒன்றும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.