காதலனுடன் வாழ்ந்து வந்த பிரபல பாடகிக்கு நேர்ந்த கதி!!

374


பிரபல பாடகி



இந்தியாவில் பிரபல பாடகி கொ லை செய்யப்பட்ட வழக்கில், அவரது காதலன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியின் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர் நாட்டுபுறப் பாடகி சுஷ்மா(25). கடந்த 1ம் திகதி இவர் இரவு 8 மணிக்கு தனது வீட்டிற்கு அருகே மர்ம நபர்களால் சு ட்டு கொ ல்லப்பட்டார்.



இதனால் இது தொடர்பாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த கொ லை வழக்கில் சுஷ்மாவின் காதலர் கஜேந்திர மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஆய்வாளர் இந்த வழக்கு குறித்து கூறுகையில்,




சுஷ்மா தனது தாய், சகோதரி மற்றும் அவரது காதலன் கஜேந்திர பாட்டி ஆகியோருடன் வசித்து வந்தார். சுஷ்மாவும் அவரது காதலன் கஜேந்திர பாட்டியும் திருமணம் செய்யாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.


சுஷ்மாவிற்கும், காதலனுக்கும் இடையே சொத்து தொடர்பான பி ரச்னை ஏற்பட்டுள்ளது. அத்துடன் சுஷ்மா நிகழ்ச்சிகளில் பங்கேற்று நாட்டுபுறப் பாடல்கள் பாடுவது, அவருடைய காதலனுக்கு பிடிக்கவில்லை.

இதனால் இருவருக்கும் அடிக்கடி பிர ச்னை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் கஜேந்திர காதலியை சுஷ்மாவை கொ லை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன் படி கடந்த ஆகஸ்ட் மாதம் சுஷ்மா சென்ற காரை விபத்து ஏற்படுத்தி கொ லை செய்ய முடிவு செய்துள்ளனர்.


ஆனால் அதில் சுஷ்மா அதிர்ஷ்டவசமாக தப்பிவிடவே, சம்பவ தினத்தன்று சுஷ்மாவை சு ட்டு கொ லை செய்துள்ளனர். சுஷ்மாவை சு ட்டுக் கொ லை செய்ய பிரமோத்,அஜப் சிங் மற்றும் டிரைவர் அமித் ஆகியோருடன் சேர்ந்து கஜேந்திரா திட்டமிட்டுள்ளார்.

இதன்படி கஜேந்திர பாட்டி சுஷ்மாவை சுட்டுக் கொ லை செய்ய இருவருக்கும் 8 லட்சம் ரூபாய் அளித்துள்ளார். இவர்கள் திட்டமிட்டபடி 1ம் திகதி இரவு சுஷ்மா தனது வீட்டிற்கு வந்து காரிலிருந்து இறங்கிய உடனே அவரை இந்த நபர்கள் சு ட்டுக் கொ ன்றுள்ளதாக காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.