பொலிசார் வேடமிட்டு சுற்றித்திரிந்த துணை நடிகை கைது!!

402


துணை நடிகை



தமிழகத்தின் சிதம்பரத்தில் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டராக நடித்து பணம் வசூலித்து வந்த துணை நடிகையை பொலிசார் கைது செய்தனர். சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் சூர்யபிரியா, சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.



சமீபத்தில் சிதம்பரம் வந்தவர், தோழிகளுடன் சேர்ந்து பணம் வசூலிக்க முடிவு செய்துள்ளார், இதற்காக பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் வேடம் அணிந்து கொண்டு சிதம்பரத்தின் பல இடங்களில் பணம் வசூலித்துள்ளார்.




இதுபற்றி துணை பொலிஸ் சூப்பிரண்டான கார்த்திகேயனுக்கு தகவல் தெரியவர, சூர்யபிரியாவை தீவிரமாக கண்காணித்து வந்தார். நேற்று மதியம் சப் இன்ஸ்பெக்டர் வேடம் அணிந்து கொண்டு வந்த சூர்யபிரியாவை மடக்கி பிடித்தனர்.


இதனை தொடர்ந்து எவ்வளவு பணம் வசூலித்துள்ளார்? யார் யாரிடம் என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு துணையாக இருந்த மூன்று தோழிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.