பிரான்சில் ப யங்கர வி பத்து : இலங்கையர்கள்.. பிரித்தானியர்கள் உட்பட 33 பேரின் நிலைமை?

459


பிரான்சில்..



பிரான்சில் வெளிநாட்டு பயணிகளுடன் பயணித்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஐரோப்பா முழுவதும் பேருந்து சேவை வழங்கி வரும் ஜேர்மனி-யின் FlixBus நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து, 33 பேருடன் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலிருந்து, பிரித்தானியா தலைநகர் லண்டனுக்கு புறப்பட்டுள்ளது.




வடக்கு பிரான்ஸ் Somme, Saint-Quentin அருகே ஏ1 மோட்டார் பாதையில் சென்றுக்கொண்டிருந்த போது மழை மற்றும் காற்று காரணமாக சறுக்கிய பேருந்து, சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த பா துகாப்பு வேலியை உ டைத்துக்கொண்டு தாறுமா றாக உ ருண்டு சென்றுள்ளது.


இந்த கோ ர விபத்தில் பேருந்தில் பயணித்த பெண் ஓட்டுநர் உட்பட 32 பயணிகள் என அனைவரும் பா திக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், பேருந்தில் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்பெயின், அவுஸ்திரேலியா, ருமேனியா, மொரீஷியஸ், ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய ஒன்பது நாடுகளை சேர்ந்தவர்கள் பயணித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பேருந்தில் 10 பிரித்தானியர்கள் பயணித்ததை உள்ளுர் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிசர் வெளியிட்டுள்ள தகவலில், கா யமடைந்த பலருக்கு சம்பவயிடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது மற்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நான்கு பேருக்கு ப லத்த கா யம் ஏற்பட்டுள்ளது என கூறினர்.

பயங்கர வி பத்தை அடுத்து மீட்பு பணிக்காக அவசர சேவை, 50 தீய ணைப்பு வீரர்கள், 30 பொலிசார் மற்றும் 10 ஆம்புலன்ஸ் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.


பேருந்திற்குள் சி க்கிய பயணிகளை வா கனத்தின் பின்புறத்தில் து ளையிட்டு மீட் புக்குழுவினர் மீட்டுள்ளனர். வி பத்திற்கான காரணம் குறித்து பிராந்திய பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களை த விர்த்து மற்ற பயணிகள் அனைவரும், FlixBus அனுப்பிய மற்றொரு பேருந்து மூலம் லண்டன் பயணித்துள்ளனர். மேலும், பா திக்கப்பட்டவர்கள் குறித்து தகவல் அறிய உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.