மூன்று பிள்ளைகளையும் கொ ன்று இளம் தாயார் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

323


இளம் தாயார்



அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் விவாகரத்தால் ம னமுடைந்த இளம் தாயார் ஒருவர் தமது மூன்று பிள்ளைகளையும் கொ ன்றுவிட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



டெக்சாஸ் மாகாணத்தின் Deer Park பகுதியில் குடியிருக்கும் தமது உறவினர் தொடர்பில் நலம் அறிய அப்பகுதி பொலிசாருக்கு நபர் ஒருவர் தொலைபேசியில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்று அப்பகுதி பொலிசார் செவ்வாய் அன்று பகல் ஆஷ்லே அவுசென்(39) என்பவர் தமது மூன்று பிள்ளைகளுடன் குடியிருக்கும் அந்த குடியிருப்புக்கு சென்றுள்ளனர்.




பூட்டியிருந்த வீட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் உள்ளே சென்று பார்த்த பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே ஆஷ்லே அவுசென் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் து ப்பாக்கியால் சு டப்பட்டு ர த்த வெ ள்ளத்தில் காணப்பட்டுள்ளனர். மேலும் கொ லைக்கு பயன்படுத்தப்பட்ட து ப்பாக்கியும், ஆஷ்லேவின் வி ரல் அடையாளத்துடன் மீட்கப்பட்டுள்ளது.


கணவர் மெர்வினிடம் இருந்து ஆஷ்லே விவாகரத்து கோரியிருந்தது கடந்த வாரமே உறுதி செய்யப்பட்டுள்ளது. அது முதல் அவர் மிகவும் ம னமுடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

தனக்கும் ஆஷ்லேவுக்கும் கருத்து வே றுபாடு இருந்ததாகவும், சாதாரண தம்பதிகள் போன்று வா க்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், ஒரு கட்டத்தில் அது விவாகரத்தில் முடிந்தது எனவும் மெர்வின் தெரிவித்துள்ளார்.

ஆஷ்லே முதன் முறையாக கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து கோரி மனு அளித்துள்ளார். பின்னர் அடுத்த 6 மாதத்தில் மீண்டும் விவாகரத்து கோரியுள்ளார். ஆனால் விவாகரத்துக்கு மெர்வின் தரப்பில் முன்வைத்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளால் அவர் மிகுந்த மன உ ளைச்சலுக்கு உள்ளானார்.

விவாகரத்துக்கு பின்னர் தமது பிள்ளைகளுடன் தனியாக செல்ல முடியாது எனவும், பிள்ளைகளுடன் மெர்வின் தங்கியிருக்கும் குடியிருப்பில் வாழ்வதென்றால் வாடகை கட்டணம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நி பந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.


இதுவே அவரை க டுமையாக பாதித்துள்ளது. மட்டுமின்றி அமெரிக்காவில் அதிகரித்துவரும் து ப்பாக்கி க லாச்சாரத்திற்கு எதிராக குரல் எழுப்பியவர்களில் ஆஷ்லேவும் ஒருவர் என கூறப்படுகிறது.