சென்னையில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சி க்கிய இரு இலங்கைப் பெண்கள்!!

264


இலங்கைப் பெண்கள்



சென்னையில் ம ர்ம ந பர்களால் க டத்தப்பட்டதாக கூறப்பட்ட 2 இலங்கைப் பெண்கள், தங்கம் க டத்தியவர்கள் என்ற ச ந்தேகத்தின் அடிப்படையில் கை து செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து நேற்று முன்தினம் சென்னை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்சில் ஃபாத்திமா மற்றும் தெரசா ஆகிய 2 இலங்கை பெண்கள் வந்தனர்.



இவர்களின் வயிற்றுப்பகுதி இயல்புக்கு மாறாக காட்சியளித்ததால் மருத்துவ ப ரிசோதனைக்காக சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேர் அழைத்துச் சென்றனர்.



அப்போது, இவர்கள் இருவரையும் காரில் க டத்திய கு ம்பல், அவர்களுக்கு இ னிமா கொடுத்து வயிற்றிலிருந்த தங்கத்தை எடுத்துவிட்டு அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், நேற்று பல்லாவரம் காவல்நிலையத்திற்கு வந்த 2 பேரும் தங்கள் பாஸ்போர்ட்டை சுங்கத்துறை அதிகாரிகள் ப றித்துக் கொண்டதாக கூறி புகார் அளித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கியதும், பின்னர் இருவரும் க டத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.


இதையடுத்து, இவர்கள் மீது கை களால் அ டித்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் த டுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பல்லாவரம் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே இரண்டு இலங்கை பெண்களும் க டத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், எந்த தரப்பிலிருந்தும் க டத்தல் பு கார் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.