வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

300

விபத்தில்..

வவுனியா குருமன்காடு பகுதியில் நேற்று (07.11.2019) மாலை இடம்பெற்ற லொறி – மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குருமன்காடு பகுதியிலிருந்து மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொறி வைரவப்புளியங்குளம் வீதிக்கு மாற முற்பட்ட சமயத்தில் வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 40 வயது மதிக்கத்தக்க நபர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.