ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் : கவனத்தை ஈர்த்த புகைப்படம்!!

645


கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிகளுக்கும் ஒரேநாளில் திருமணம் நடைபெற உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.



கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பொத்தன்கோடு நானுட்டுகாவு என்ற கிராமத்தில் கடந்த 1995ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி பிரேம்குமார்- ரமாதேவி தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தது. 4 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை பிறந்தது.

அனைவரும் ஒரே ராசியில் உத்ர நட்சத்திரத்தில் பிறந்ததால் தனது குழந்தைகளுக்கு உத்ரஜா, உத்தாரா, உத்தமா, உத்ரா மற்றும் ஆண் குழந்தைக்கு உத்ராஜன் எனப் பெயர் வைத்தார்.



இவர்கள் 4 பேரும் ஒரே மாதிரி வளர்க்கப்பட்டனர். இந்நிலையில் இந்த குழந்தைகளுக்கு 9 வயதாக இருக்கும்போது ப்ரேம் குமாருக்கு ஏற்பட்ட தொழில் ந ஷ்டத்தால் த ற்கொ லை செய்து கொண்டார்.



இது கேரளாவில் பெரும் அ திர்ச்சியைக் கிளப்பியது. 5 குழந்தைகளைப் பெற்ற தந்தை தொழில் நஷ்டம் காரணமாகத் த ற்கொ லை செய்து கொண்டதால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் செய்வது அறியாது தி ண்டாடினர். இந்நிலையில் கேரள மாநில அரசு அவருக்குக் கூட்டுறவு வங்கியில் பணி வழங்கியது.


அதன் பின் தன் கடும் உழைப்பால் தனது 5 குழந்தைகளையும் வளர்த்தார் பூமாதேவி.

தற்போது உத்ரா பேஷன் டிசைனராகவும், உத்தரஜா, உத்தம்மா ஆகியோர் மய க்கவியல் ம ருத்துவராகவும், உத்தாரா பத்திரிக்கையாளராகவும், பணியாற்றி வருகின்றனர்.


இந்நிலையில் இவர்கள் 4 பேருக்குத் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்க்கப்பட்டது.

தற்போது 4 பேருக்கும் தகுந்த மாப்பிள்ளைகள் கிடைத்துவிட்ட நிலையில் இவர்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அதற்கான ஏற்பாடுகளை இந்த நான்கு பேருடன் உடன் பிறந்த உத்ராஜன் செய்து வருகிறார்.

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பேருக்கு ஒரே நேரத்தில் ஒரே மணிமேடையில் திருமணம் நடக்கவுள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.