மகள் திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்த தந்தைக்கு ஏற்பட்ட அ திர்ச்சி : வீடு முழுவதும் இருந்த மிளகாய்ப் பொடி!!

219


திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்த தந்தைக்கு..



தமிழகத்தில் மகளின் திருமணம் முடிந்து தந்தை வீடு திரும்பிய போது வீட்டில் சீர் வரிசை கொடுக்க வைத்திருந்த 100 சவரன் தங்க நகைகள் கொ ள்ளையடிக்கப்பட்டதை கண்டு அ திர்ச்சியடைந்தார்.



வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த கிராமணி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (50). இவரது மூத்த மகளான பவித்ராவிற்கு இன்று காலை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.




இந்த திருமண நிகழ்ச்சிக்காக நேற்று மாலை சரவணன் குடும்பத்துடன் ஆரணி சென்றார். திருமணம் முடித்து இன்று வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உ டைக்கப்பட்டிருப்பதை கண்டு அ திர்ச்சியடைந்தார்.


வீட்டை ஆராய்ந்த போது பீரோவில் இருந்த 100 சவரன் மற்றும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பணம் கொ ள்ளை போனது தெரியவந்தது.

இதையடுத்து வாலாஜாப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


நகை மற்றும் பணத்தை கொ ள்ளையடித்த ம ர்மந பர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவிவிட்டு சென்றுள்ளனர். சரவணன் வைத்திருந்த பழைய தங்க நகைகள் மற்றும் மகளுக்கு சீராக கொடுக்க வைத்திருந்த நகைகள் என அனைத்தும் தி ருடு போனதாக தெரியவந்துள்ளது.