ப றிபோன இரண்டு உ யிர்கள்: பில்லி சூனிய நம்பிக்கையால் கைது செய்யப்பட்ட தாய்-மகள்!!

289


பில்லி சூனிய நம்பிக்கையால்..



பில்லி, சூனியம் வைப்பதாக சந்தேகித்து இளைஞரை கொ லை செய்த தாய் – மகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அருண் சந்தோஷ் வாக்மரே (35) என்கிற இளைஞர், ஞாயிற்றுக்கிழமை தாரோடி குர்த் பகுதியில் இ றந்து கி டந்தார்.



இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், செவ்வாய்க்கிழமை இரவு ரத்னமலா மனோஜ் கன்வீர் (40), அவரது மகள் சுபாங்கி (20) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.




சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், அருண் சந்தோஷின் தந்தை வழி அத்தை தான் கன்வீர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன் கன்வீரின் சகோதரன் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துள்ளார். அடுத்த சில தினங்களில் கன்வீரின் மற்றொரு மகளும் உ டல்நிலை சரியில்லாமல் ப டுக்கையாக கிடந்துள்ளார்.


அருண் மற்றும் அவருடைய தாய் தனது தன்னுடைய குடும்பத்திற்கு பில்லி, சூனியம் வைப்பதாலே இப்படி நடப்பதாக கருதிய கன்வீர் அவர்களை ப ழிக்குப்ப ழி வாங்க முடிவு செய்தார்.

இதற்கிடையில் கன்வீரின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த கிசான் விஸ்வகர்மா, சுபாங்கியுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளார். இதனை அறிந்துகொண்ட அருண், விஸ்வகர்மாவுடன் சுபாங்கியை பழக அனுமதிக்க வேண்டாம் என கன்வீரிடன் எ ச்சரித்து சென்றுள்ளார்.


அருண் குடும்பத்தார் சூனியம் வைப்பதோடு, தன்னுடைய குடும்ப விவகாரங்களில் மூக்கை நுழைப்பதால் ஆத்திரமடைந்த கன்வீர், கிசான் துணையுடன் அருணை கொ லை செய்ததாக கூறியுள்ளனர். மேலும் தப்பி ஓடிய விஸ்வகர்மாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.