திடீரென வீசிய காற்றினால் ஒருவர் ப லி!!

243


வீசிய காற்றினால்..



வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கறுவாக்கேணி, சுங்கான்கேணி பகுதியில் இன்று அதிகாலை வீசிய சுழல் காற்றினால் ஒருவர் ம ரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.



இதன்போது, கறுவாக்கேணியில் அமைந்துள்ள தனியார் ஒருவரின் கடைத் தொகுதியை பராமரிக்கும் பாடசாலை வீதி சுங்கான்கேணியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஆறுமுகம் (வயது 62) என்பரே உ யிரிழந்துள்ளார்.




கடைத் தொகுதியை பராமரிக்கும் குறித்த நபருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீசிய சுழல் காற்றினால் வீட்டின் சுவர் பகுதி குறித்த நபரின் தலையில் இடிந்து விழுந்தமையால் ஸ்தலத்திலேயே அவர் உ யிரிழந்துள்ளார்.


உ யிரிழந்த நபரின் ச டலம் மட்டக்களப்பு மாவட்ட கு ற்றத் த டுப்பு பிரிவினரின் விசாரணையின் பின்னர் இன்று மாலை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பி ரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.