வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சித்தவர்கள் கடற்படையிடம் சிக்கினர்..

356


asylum

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த குழுவினர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மட்டக்களப்பு கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த இவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் பயணித்த படகை திருகோணமலை துறைமுகத்திற்கு எடுத்துவருவதற்கான நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டுள்ளது.



இந்த படகில் பயணித்தவர்களது எண்ணிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லை.