வவுனியாவில் எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்வு!!

475

விழிப்புணர்வு நிகழ்வு

எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வும் கருத்தரங்கும் ஊர்வலமும் வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி பவானி பசுபதிராஜா தலைமை தாங்கியிருந்தார்.

இதன்போது எயிட்ஸ் நோய் பரவுவதன் முறைகள் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக வவுனியா போலீஸ் உத்தியோகத்தருக்கும், முற்சக்கரவண்டி உரிமையாளர்கள், பெற்றோர்கள், மற்றும் தாதியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இதன் பின் நகரில் வைத்தியர்கள், பொலீசார், தாதியர்கள், பெற்றோர்கள் மற்றும் முற்சக்கரவண்டிகள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டதுடன் வவுனியா நகர்ப்பகுதியில் விழிப்புணர்வு ஊர்வலமும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தாய்சேய் நலன் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி ஜெயதரன், பா லியல் நோய் சிகிச்சை நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி கே.சந்திரகுமார்,

பா லியல் நோய் சிகிச்சை நிலைய பொது சுகாதார பரிசோதகர் து.சிவானந்தன் மற்றும் முற்சக்கரவண்டி உரிமையாளர்கள், பொலீசார், சாரதிகள், தாதியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.