பரோட்டா எனும் அரக்கன் : இதை உண்பவர்களுக்கு ம ரணம் நிச்சயமாம் : கண்டிப்பாக படியுங்கள்!!

1698

பரோட்டா

கோதுமையை சுத்தம் செய்யும் பொழுது அதிலிருந்து உரிக்கப்படும் பொருள் தான் மைதா. கோதுமை மாவின் தவிடு, முளை தவிர்த்த இந்த மைதா மாவு “பென்சைல் பெராக்சைடு” என்ற ரசாயனப் பொருளால் ப்ளீச் செய்யப்பட்டு அதன் வெண்மை நிறம் கூட்டப்படுகின்றது.

இந்த பென்சைல் பெராக்சைடு முடிக்கு டை அடிக்க பயன்படும் ஒரு ரசாயனம் ஆகும். இது தவிர மைதா மாவை மிருதுவாக்க “அலோசன்” எனும் ரசாயனமும் பயன்படுத்தப்படுகின்றது.

மேலும் செயற்கை நிறமூட்டிகள், மினரல் எண்ணெய், சுவையூட்டிகள், சக்கரை, சாக்கரின், அஜினமோட்டோவும் மைதாவில் கலக்கப்படுகின்றது. இது எல்லாம் சேர்ந்தது தான் மைதா மா.

மைதாமாவில் உள்ள அலோசன் நீரழிவு நோய் ஏற்பட வழிவகுக்கும். மைதாமாவில் உள்ள “க்ளுட்டன்” செரிமானம் ஆக நீண்ட நேரமாகிறது. இதை உண்பவர்களுக்கு செரிமான சிக்கல் ஏற்படுவது நிச்சயம்.

இதனால் பிரட், பரோட்டா,கேக் உட்பட மைதாவை கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் அத்தனையும் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் கிடையாது.

மைதாவில் சுத்தமாக நார்ச்சத்து கிடையாது. இதனால் நமது செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு செரிமான சக்தி முற்றிலும் குறைந்து விடுகின்றது. ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மைதா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிலும் மைதா மாவை கொண்டு தயாரிக்கப்படும் பரோட்டா எண்ணெயில் பொறிக்கப்படுவதானல் ஜீரண மண்டலத்தை முற்றிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஆனால் இன்று கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பரோட்டா கடைக்கள் பரவி கிடைக்கின்றது.

நம் அன்றாட வாழ்வில் பரோட்டா தவிர்க்கமுடியாத உணவாக மாறிவிட்டது. ஆனால் இது மனிதனை மெல்ல கொள்ளும் விஷமாக கருதப்படுகின்றது.

பரோட்டா செரிமானம் அடைவதற்கு அதிகளவு நேரத்தை எடுத்து கொள்கிறது. பரோட்டாவின் இருக்கும் எண்ணெயால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும், உடலுக்கு சோர்வை அதிகரிக்கும். எனவே மைதாவில் செய்யும் எந்த உணவு பொருட்களாக இருந்தாலும் அதனை தவிர்ப்பது நல்லதாகும்.