வவுனியா இந்துகல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி!!

589

வருடாந்த மெய்வல்லுனர் போட்டி

வவுனியா இந்துக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி நேற்றையதினம் (31.01.2020) கல்லூரியின் அதிபர் த.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இல்ல மெய்வல்லுனர் போட்டியில் கொடியேற்றல், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல், சத்தியபிரமாணம், அணிநடை, உடற்பயிற்சி கண்காட்சி, கயிறு இழுத்தல், அஞ்சல் ஓட்டம், சிறுவர்களுக்கான நிகழ்வுகள் மற்றும் பரிசளிப்பு ஆகியன நடைபெற்றிருந்தது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக ஓய்வு பெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர் க.அமிர்தலிங்கம் கலந்துகொண்டிருந்தார்.

இல்ல மெய்வல்லுனர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், தேசிய ரீதியில் விளையாட்டில் சாதனைகள் புரிந்த மாணவர்களுக்கும் கேடயங்களும், பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர், க.சந்திரகுலசிங்கம், வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.மரியநாயகம், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் கி.யூட்பரதமாறன், மாவட்ட செயலக தொழில் வழிகாட்டல் ஆலோசகர் ச.சுரேஸ்குமார் மற்றும் மாணவர்கள் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.