EPF கணக்கினை பேணும் ஊழியர்களுக்காக அறிமுகமாகும் புதிய வசதி!!

535

புதிய வசதி

ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு செலுத்தப்படும் தொகை தொடர்பான விபரங்களை உரியவர்களின் கையடக்க தொலைபேசிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் கணக்குகளில் மாதாந்தம் வைப்பீடு செய்யும் பணம் தொடர்பில் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் கையடக்க தொலைபேசி சேவையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் மாதாந்தம் தமது ஊழியர் சேமலாப கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையை அந்த அங்கத்தவர்கள் எந்தவித சிரமமும் இன்றி அறிந்துகொள்ள முடியும்.

தற்போது நடைமுறையிலுள்ள செயற்பாட்டுக்கு அமைவாக ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்கள் தமது பங்களிப்பு தொகை நிதியத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்வதற்காக 06 தொடக்கம் 12 மாதம் காத்திருக்க வேண்டும்.

இதனால் பங்களிப்பு செய்யப்பட்ட நிதி கணக்கில் சேர்க்கப்பட்டமை தொடர்பில் பல பிரச்சினைகளை அங்கத்தவர்கள் அடிக்கடி எதிர்கொள்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதனால் இந்த நிதியத்தின் அங்கத்தவர்கள் தமது மாதாந்த பங்களிப்பு தொகை தமது கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதை மாதாந்தம் அவர்களால் உறுதி செய்யக்கூடிய வகையில் கணக்கில் சேர்க்கப்பட்டதுடன்,

அங்கத்தவர்களினால் தாம் குறிப்பிடும் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ் செய்தியின் மூலம் அறிவிக்கும் சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு, திறனாற்றல் அபிவிருத்தி தொழில் வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் துறைசார் அமைச்சர்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.