இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் குணமடைந்தார்!!

267


இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.



குறித்த நபர் அங்கொடையில் உள்ள தொற்று நோய் தடுப்பு பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமாகிய நிலையில் இன்று வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.



ஏற்கனவே முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளியாக கண்டுபிடிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டியுடன் இருந்த நிலையிலேயே இவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.