வங்கிச் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்த ஜனாதிபதி!!

398


வங்கிச் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவித்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அவசியமான இடங்களில் ஊரடங்கு வேளையும் வங்கி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுள்ளார்.



இது தொடர்பான அறிவுறுத்தல் அனைத்து வணிக வங்கிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் கோரானா வைரஸ் தொற்றுப் பரம்பலை கட்டுப்படுத்த தொடர் ஊரடங்கு நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.



அத்தியாவசிய சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ள வசதியாக சுழற்சி முறையில் 60-72 மணித்தியால இடைவெளியில் 8 மணித்தியாளங்கள் தளர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.