கொரோனா வைரஸின் கோரத் தாண்டவம் : உலகில் நான்கில் ஒரு பகுதி lockdown!!

334


கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் காரணமாக உலகில் நான்கில் ஒரு பகுதி லொக்டவுன் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



1.3 பில்லியன் மக்கள் வாழும் இந்தியாவை முழுமையாக முடக்குவதாக அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோதி அறிவித்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய குறைந்த பட்சம் 7.8 பில்லியன் மக்கள் வாழும் உலகில் நான்கில் ஒரு பகுதியில் முழுமையாக மூடப்பட்டுள்ளது.



கொரொனா வைரஸ் தொற்று காரணமாக ருவாண்டாவில் இருந்து கலிபோர்னியா வரையிலும், நிவ்யோர்க்கில் இருந்து நியூசிலாந்து வரையும் பல பகுதிகள் மூடப்பட்டுள்ளன.



அத்துடன் அமெரிக்காவில் அரைவாசிப் பேர் தற்போது வீடுகளுக்குள் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


வியாழன் நள்ளிரவு முதல் தென்னாபிரிக்காவிலுள்ள அனைத்து நாடுகளிலுள்ள மக்களும் 21 நாட்கள் வீட்டில் தங்கியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் நான்கு இலட்சத்து 68 ஆயிரத்து 905 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்த வைரஸ் காரணமாக சீனா, இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்பெயின் உட்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.