அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை : கொழும்பை மையமாகக்கொண்ட இணையம் முற்றுகை!!

265


கொழும்பை மையமாகக்கொண்ட சில்லறை விற்பனை இணையம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.



பொருட்களை மிகைப்படுத்திய விலையில் விற்பனை செய்த நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சில்லறை விற்பனை இணையம் டின்மீன் ஒன்று 550 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 500 ரூபாவாகவும், பருப்பு ஒரு கிலோ 180 ரூபாவாகவும், கோதுமை மா ஒரு கிலோ 350 ரூபாவாகவும் பட்டியலிட்டிருந்ததாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.



இந்தநிலையில் நுகர்வோரிடம் இருந்து பெற்ற அதிக பணத்தை மீண்டும் செலுத்த இந்த சில்லறை விற்பனை இணையம் இணங்கியுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.



இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக டின்மீன், பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு அண்மையில் அரசினால் நிர்ணய விலை அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.