மோதரை விஸ்னு கோவில், கரவலவாடிக்கு அருகில், உடலில் மண்ணென்னையை ஊற்றி தீவைத்துக் கொண்ட நபர் இன்று உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 3 மணியளவில் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர், மோதரை பகுதியைச் சேர்ந்த, 58 வயதான மொஹமட் பரூஸ் எனத் தெரியவந்துள்ளது.
எனினும் இவர் தீவைத்துக் கொண்டமைக்கான காரணங்கள் இன்னும் தெரியவரவில்லை.
இதுகுறித்த மேலதிக விசாரணைகளை மோதரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.