மோதரை பகுதியில் ஒருவர் தீக்குளித்து உயிரிழப்பு..!

399


மோதரை விஸ்னு கோவில், கரவலவாடிக்கு அருகில், உடலில் மண்ணென்னையை ஊற்றி தீவைத்துக் கொண்ட நபர் இன்று உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 3 மணியளவில் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



உயிரிழந்தவர், மோதரை பகுதியைச் சேர்ந்த, 58 வயதான மொஹமட் பரூஸ் எனத் தெரியவந்துள்ளது.

எனினும் இவர் தீவைத்துக் கொண்டமைக்கான காரணங்கள் இன்னும் தெரியவரவில்லை.



இதுகுறித்த மேலதிக விசாரணைகளை மோதரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.