தடுப்பூசி இல்லாமலே கொரோனா வைரஸை தடுக்கும் மருந்து கண்டுபிடிப்பு!!

482

கொரோனா…

தடுப்பூசி இல்லாமலேயே கொரோனாவை தடுக்க மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக சீனா ஆய்வகம் தெரிவித்துள்ளது. உலகை அ ச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசை தடுக்க தடுப்பூசி மற்றும் மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

சீனாவும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் தடுப்பூசி இல்லாமலேயே கொரோனாவை தடுக்க மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக சீனா ஆய்வகம் தெரிவித்துள்ளது. சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான பீஜீங் பல்கலைக்கழக ஆய்வத்தில் விஞ்ஞானிகள் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மருந்து மூலம் கொரோனா வைரசில் இருந்து பாதிக்கப்பட்ட நபர் குணமடைவது மட்டுமல்ல, கொரோனாவுக்கு எதிராக குறுகிய காலத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதித்த எலியின் உடலில் இந்த மருந்தை செலுத்திய போது 5 நாட்களில் வைரஸ் எண்ணிக்கை பல மடங்கு குறைந்தது என்றும், இந்த ஆண்டு இறுதியில் இந்த மருந்து தயாராகி விடும் என்று சீன பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “விஞ்ஞானி சன்னிஜி தலைமையிலான குழு இந்த மருந்தை உருவாக்கி உள்ளது. முதலில் விலங்குகளுக்கு இதை கொடுத்து பரிசோதிக்கப்பட்டது.

பின்னர் இந்த மருந்து 19 கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டது. வைரசுக்கு எதிராக இந்த மருந்து தீவிரமாக போ ராடுகிறது. உடலில் கொரோனா வைரஸ் பரவுவதை அதிரடியாக தடுக்கிறது. மேலும் உடலில் உள்ள நுண்ணுயிர் எ திர்ப்பு சக்தியையும் நடுநிலையாக்குகிறது.

இந்த மருந்தை கொரோனா பாதித்த ஒருவருக்கு செலுத்தும் போது அடுத்த 5 நாட்களில் அந்த வைரசின் எண்ணிக்கையான 2500-க்கும் கீழ் குறைகிறது. இந்த மருந்து தொடர்ந்து சோதிக்கப்பட்டு மேலும் மேன்படுத்தவும் முயற்சிகள் நடந்து வருகிறது.