வவுனியாவில் கடும் காற்றினால் வீட்டிற்கு மேல் விழுந்த மரம்!!

452

கடும் காற்றினால்..

வவுனியா தேக்கவத்தை பகுதியில் வீசிய கடும் காற்றினால் மரம் ஒன்று சாய்ந்து வீட்டின் மேல் விழுந்துள்ளது.

வீட்டில் சிறு குழந்தை உட்பட குடும்பத்தினர் வசித்த நிலையில் அவர்களுக்கு எந்தவித அசம்பாவிதங்களும் இடம்பெறாத நிலையில் வீட்டின் ஒரு பகுதி மாத்திரம் சேதமடைந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபைக்கு தெரியப்படுத்திய நிலையில் உடனடியாக குறித்த பகுதிக்கு சென்ற நகரசபையின் உப தவிசாளர் சுந்தரம் குமாரசாமி, நகரசபை இயந்திரங்களை வரவழைத்து குறித்த மரத்தினை அகற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.