வவுனியாவில் குளத்து காணிகளை அபகரித்து அமைக்கப்பட்ட நிரந்தர வேலிகள் : அகற்றிய கமநல அபிவிருத்தி திணைக்களம்!!

2419


குளத்து காணிகளை அபகரித்து..



வவுனியாவில் குளத்து காணிகளை அபகரித்து அமைக்கப்பட்ட நிரந்தர வேலிகளை அகற்றும் நடவடிக்கையில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் ஈடுபட்டுள்ளது.



அந்தவகையில் இன்று (02.06.2020) காலை தொடக்கம் நான்கு குளங்களின் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து நிரந்தர மற்றும் தற்காலிக வேலிகளை அமைந்தவர்களுடைய வேலிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.




கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தலைமையிலான உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிசார் இணைந்து இச் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.


குளங்களை பாதுகாக்கும் நோக்கோடு பட்டக்காட்டு குளம், வேப்பங்குளம், கோவில்குளம், ஓயார் சின்னக்குளம் ஆகிய குளங்களின் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்ட வேலிகளை அகற்று குறித்த காணிகள் மீட்கப்படுவதுடன்,

குளத்து காணிகளை அபகரித்து நிரந்தர கட்டடங்கள் அமைத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.