வவுனியா அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருப்பலி பூஜைகள்!!

1415

திருப்பலி பூஜைகள்..

அந்தோனியார் பெருநாளை முன்னிட்டு இன்று வவுனியா, இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் விசேட திருப்பலி பூஜைகள் சிற்பபாக இடம்பெற்றது.

மன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட கத்தோலிக்கர்களே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது ஆயரினால் விசேட நற்கருத்துக்கள் வழங்கப்பட்டதுடன் தற்போதைய சூழல் நீங்கி மக்கள் சமாதானமானதும் சுதந்திரமானதுமான வாழ்க்கை வாழ பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது ஆலய வளாகத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனரா எனவும் கண்காணித்திருந்தனர்.