11 வயது சிறுமியின் கண்களில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டே இருக்கும் பரிதாபம்!!

2672

சிறுமியின் கண்களில் இருந்து..

11 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கண்களில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டே இருந்ததால் ப யந்து போன அவரது தாய் அந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தார்.

தினமும் 2 அல்லது 3 முறை கண்களில் இருந்து இரத்தம் வழிவதாகவும் அப்படி வரும் போது இரண்டு நிமிடங்கள் வரை ரத்தம் கசிந்து வரும் எனவும் அவரது தாய் தெரிவித்தார். அந்த சமயத்தில் அந்த சிறுமி வ லி எதுவும் உணராதது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் குழு சிறுமியை க ண்காணித்தது. இதன் காரணம் என்ன என்பதை அறிய பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பார்வை 20-க்கு 20 சரியாக இருந்தது. சி.டி ஸ்கேன்களிலும் எதுவும் தெரியவில்லை. கண்களில் இருந்து வரும் கண்ணீரின் செல்களை பரிசோதித்தபோது எல்லாம் இயல்பாக இருந்துள்ளது.

இதனால் மருத்துவர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் தற்போது சிறுமிக்கு ஹீமோலாக்ரியா (Haemolacria ) என்ற அரிதான நோய் என்று இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஹீமோலாக்ரியா பாக்டீரியாவின் வெண்படலம் மற்றும் ஹார்மோன்களுடன் தொடர்புடையது எனவும் இது ஒரு கட்டியின் அடையாளமாக இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் சிறுமிக்கு ஆபத்து ஏதும் இருப்பதாக மருத்துவர்கள் கூறவில்லை.