
ஒரு காலத்தில் ரொம்ப இளமையாக கல்லூரி மாணவன் போல் இருந்த அஜித் திடீரென்று வெயிட் போட்டு குண்டானார். ஆக்ஷன் காட்சிகளில் நடித்தபோது ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சம்பந்தமான பிரச்சினைகள் காரணமாக அவரது உடலில் 24 இடங்களில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டது.
அதற்காக சாப்பிட்ட மாத்திரை மருந்துகளால் உடல் குண்டானது. அதன் பிறகு உடம்மை குறைத்தே தீருவது என்று கருதி ஒரு வருடம் கடுமையான உடற்பயிற்சி, டயட்டில் இருந்து உடம்மை குறைத்தார். திருப்பதி படத்தில் அவர் நடித்தபோது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மெலிந்திருந்தார். அஜித்தின் இந்த புதிய தோற்றம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே சாதாரண தோற்றத்துக்கு மீண்டும் வந்தார்.
அதன்பிறகு எந்த இமேஜும் பார்க்காமல் தனது நடுத்தர வயது தோற்றத்தை வெளிப்படுத்தினார். ரஜினிக்கு அடுத்து தோற்றத்தின் இமேஜ் பற்றி கவலைப்படடாத நட்சத்திரமாக அஜித் கருதப்படுகிறார். ஆங்காங்கே நரைத்த முடியுடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். அதுவே ஒரு அழகாக இருந்தது.
அதனால் இயக்குனர் வெங்கட் பிரபு அவரை அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மங்காத்தா படத்தில் நடிக்க வைத்தார். அதுவும் நெகட்டிவ் கரக்டரில். அடுத்து ஆரம்பம் படத்திலும் அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை பயன்படுத்திக் கொண்டார் விஷ்ணுவர்த்தன். இரண்டுமே ஹிட் என்பதால் அடுத்து வீரம் படத்திலும் அதே லுக்கில் வில்லேஜ் கெட்-அப்பாக மாற்றினார் சிவா.
அடுத்து அஜித் நடிக்கப்போவது கௌதம் மேனன் படத்தில். கௌதம் மேனனுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையை தீர்க்க அஜித்தே வழிய வந்து அவர் படத்தில் நடிக்க இருக்கிறார். “எனக்காக பிரஷ்சா ஒரு கதை ரெடிபண்ணுங்க எல்லா பிரச்சினையையும் தீர்த்துவிடலாம்” என்று கௌதமுக்கு அஜித் நம்பிக்கையூட்ட பக்காவான ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி அஜித்திடம் காட்டி அதற்கு ஓகேவும் வாங்கி விட்டார்.
பொதுவாக கௌதம் மேனன் ஹீரோக்களை அழகாகவே காட்டுவார். அவர் அஜித்தை இதுவரை இல்லாத அளவிற்கு அழகான புதிய தோற்றத்தில் காட்ட இருக்கிறார். முதல் கட்டமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக் அகற்றப்பட்டு விட்டது.
இணையதளத்திலிருந்தும், பிரபல ஓவியர்களை கொண்டும் பல வித தோற்றங்களை பிரதியெடுத்து அதில் இருந்து சிலவற்றை தேர்வு செய்து அஜித்திடம் கொடுத்துள்ளார். அதில் ஒன்றை தேர்வு செய்திருக்கிறார் அஜித். இப்போது அந்த தோற்றத்திற்கு மாறி வருகிறார்.
அதனால் நண்பர்களை சந்திப்பது பொது இடத்தில் தோன்றுதை தவிர்த்து வருகிறார். அனேகமாக கௌதம் மேன்ன படம் முடியும் வரை வெளியில் வரமாட்டார் என்கிறார்கள். படப்பிடிப்பு முழுமையாக முடியும் வரை அஜித்தின் தோற்றம் பற்றியும், கதை பற்றியும் ரகசியம் காக்க முடிவு செய்திருக்கிறார்கள்.





