கொழும்பில் ஹெ ரோய்ன் போ தைப்பொருளுடன் பிடிக்கப்பட்ட பூனை!!

497

பூனை..

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் இருந்து ஹெ ரோய்ன் போ தைப்பொ ருள் மற்றும் இரண்டு கைத்தொலைபேசி சிம் அட்டைகளுடன் பூனை ஒன்றை சிறைச்சாலை பு லனாய்வு அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பூனை பிடிக்கப்பட்டபோது அதன் கழுத்தில் 1.7 கிராம் ஹெ ரோய்ன், 2 சிம் அட்டைகள் மற்றும் மெமொரி அட்டை என்பன கட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பூனையை யார் சிறைச்சாலைக்குள் அனுப்ப முயற்சித்தது என்பது தொடர்பில் வி சாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக தொலைபேசிகளை சிறைச்சாலைகளுக்குள் வீசும் சம்பவங்கள், பூஸா, வெலிக்கடை மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலை பிரதேசங்களில் இடம்பெற்றன.

இவை தோல்வியடைந்த நிலையிலேயே பூனையின் ஊடாக சிறைக்குள் குறித்த பொருட்களை கொண்டு செல்லும் உத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.