இன்றும் மீன்பிடியில் ஈடுபடுவது நல்லதல்ல..!

333

புத்தளத்திலிருந்து காலி நோக்கி ஹம்பாந்தோட்டை வரையாக கடற் பரப்பு இன்றும் கொந்தளிப்பாக காணப்படும் என வானிலை அவதான நிலைம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் கடற்தொழில் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் வானிலை அவதான நிலைம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையைச் சூழவுள்ள மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்பில் கடும் காற்று வீசும் எனவும் இது கிலோ மீற்றருக்கு 70ஆக இருக்கும் எனவும் அவ் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு, சபரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் ஆங்காங்கே மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.