நாடாளுமன்றம் நீரில் மூழ்கும் ஆபத்து!!

705

நாடாளுமன்றம்..

பெய்து வரும் கன மழைக் காரணமாக நாடாளுமன்றம் அமைந்துள்ள தியவன்னா ஓயா பெருக்கெடுக்கும் மட்டத்திற்கு வந்துள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற கட்டடத் தொகுதி நீரில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் அதிகரித்தால், நாடாளுமன்றம் நீரில் மூழ்கி போகும் என நாடாளுமன்றத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். அத்துடன் மழைப் பெய்யும் நிலைமை மேலும் இரண்டு தினங்கள் தொடர்ந்தால், இந்த நிலைமை ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தியவன்னா ஓயாவின் நீர் மட்டம் அதிகரிப்பதை கண்காணிப்பதற்காக ஏற்கனவே கடற்படையின் சில அணிகள் கடமை ஈடுபடுத்தப்படுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.