வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் பரிதாப மரணம்!!

2562

மாணவன் பரிதாப மரணம்..

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இன்று(13.09) இரவு இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் ப ரிதாபமாக மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,

பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கிசென்ற மோட்டார் சைக்கிள் நொச்சிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவனுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த இ.புவிதன் (வயது14) என்ற மாணவன் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் இராணுவத்தினரின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்துள்ளார்.

இவர் புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்று வருகிறார். ச டலம் தற்போது வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கை து செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையநபர் த ப்பிச்சென் றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பாக மேலதிக வி சாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.