மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆசிரியர் ஒருவர் உ யிரிழப்பு!!

1623

விபத்தில்..

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனமொன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில் ஆசிரியர் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெஹிவத்தை – சேருநுவர பகுதியைச் சேர்ந்த எச் ஏ.கருணாரத்தின என்ற 43 வயதுடைய ஆசிரியர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்துச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாயிலிருந்து தெஹிவத்தைக்குச் சென்ற டிப்பர் வாகனமும்,தெஹிவத்தையிலிருந்து கல்லாறு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியர் ஒருவருடன் மோதுண்டதிலே இவ்விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டிப்பர் வாகனம் வேகமாக சென்றதிலே இவ்விபத்து நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சேருநுவர பொலிஸார் டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதோடு, விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.